6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய மகாலட்சுமி,

by Editor / 14-05-2023 11:12:04am
 6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய மகாலட்சுமி,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணிகண்டன்(29), முகநூலில் மகாலட்சுமி என்பவருடன் பழகியுள்ளார். அவர்களின் நட்பு காதலாக மாறியதையடுத்து, இவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் செய்த சில நாட்களில் மகாலாட்சுமி ரூ.1 லட்சம் பணம், 8 சவரன் நகையுடன் மாயமாகியுள்ளார். மணிகண்டன் அவரை தொடர்பு கொண்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஏற்கனவே நான்கு ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய மகாலட்சுமி, ஐந்தாவதாக மணிகண்டனை திருமணம் செய்ததும், தற்போது ஆறாவதாக தற்போது சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா குமாரபாளையம் கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6-வதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், தற்போது 5-ம் வகுப்பு வரைக்கும் படித்துள்ள மகாலட்சுமியின் வயது 32 ஆகும். வயதை மறைத்து, தன்னை விட 2 வயது சிறியவரான மணிகண்டனை அவர் திருமணம் செய்துள்ளார். இதுமட்டுமின்றி மகாலட்சுமிக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகன்களும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளதும் தெரியவந்தது. இதுவரை ஏமாந்தவர்கள் யார்? தொடர்ந்து, மகாலட்சுமியை கைது செய்த போலீசார், அவரால் இதுவரையில் ஏமாற்றப்பட்டவர்கள் யார்? யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

 

Tags :

Share via