ஐபிஎல் கோப்பை யாருக்கு ? சென்னை அணி பெற போகிறதா- குஜராத் அணி பெற போகிறதா ..?

by Admin / 28-05-2023 12:37:01am
ஐபிஎல் கோப்பை யாருக்கு ? சென்னை அணி பெற போகிறதா- குஜராத் அணி பெற போகிறதா ..?

இன்று அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே ஆன ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது கிரிக்கட் ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திருவிழா இன்று குஜராத் மண்ணில் வெற்றி கோப்பையை சென்னை அணி பெற போகிறதா? இல்லை, தம் சொந்த மண்ணில் வெற்றி கோப்பையை கம்பீரமாக குஜராத் அணி பெற போகிறதா? என்பதை இன்றைய போட்டியின் உடைய களம் தீர்மானிக்கும்

 யார் வெற்றி பெறுவார்கள் என்கிற கருத்துக்கணிப்பை பார்க்கும் பொழுது சூப்பர் கிங்ஸ் 50 விழுக்காடு வெற்றியை பெறுவதாகவும் குஜராத் டைட்டன்ஸ் 50% வெற்றியை பெறுவதாகவும் கணிப்பு வெளியாகி இருக்கிறது. இது மதில் மேல் பூனையாக ,கணிக்க முடியாத நிலையில் இரு அணிகளும் பலம் பெற்றிருப்பதை நிரூபிக்கின்றது. இருப்பினும், இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு பிறகு இரு அணிகளும் ஆடுகிற ஆட்டமே வெற்றி தோல்விகளை நமக்கு புலப்படுத்தும்.

 

Tags :

Share via