ஷாக் அடித்து 6 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி

by Staff / 29-05-2023 04:06:03pm
 ஷாக் அடித்து 6 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மத்திய ரயில்வேயின் தன்பாத் கோட்டத்திற்கு உட்பட்ட நிசித்பூர் என்ற ஊரில் ரயில்வே கிராசிங்கில் மின்கம்பம் அமைக்கும் பணியின் போது, மின்சாரம் தாக்கியதில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து மின்வாரிய அதிகாரிகளுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். 25000 வோல்ட் உயர் அழுத்த கம்பியினால் ஆறு ஒப்பந்த தொழிலாளர்களும் மின்சாரம் தாக்கி இறந்ததாக மூத்த ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

 

Tags :

Share via