9 லட்சம் மதிப்பிலான புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணி

by Admin / 30-05-2023 05:35:51pm
 9 லட்சம் மதிப்பிலான புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணி

 

கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 27 லட்சம் மதிப்பிலான 3 புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் எட்டயாபுரம் சாலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணியையும். கோவில்பட்டி ரயில்வே நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணியையும். கோவில்பட்டி சாத்தூர் மெயின் சாலை சங்கலிங்கபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு 3 புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், அம்மா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் நீலகண்டன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளி பாண்டி, அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், பழனி குமார், பழனி முருகன், கோமதி, ரேவதி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

 9 லட்சம் மதிப்பிலான புதிய பேருந்து நிழற்கூடை அமைக்கும் பணி
 

Tags :

Share via