கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்தறுத்து கொலை.

by Editor / 30-05-2023 09:50:06pm
கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்தறுத்து கொலை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி இவரது மனைவி ராஜேஸ்வரி(40)இவர்களுக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும் சங்கரநத்தம் பகுதியை சேர்ந்த பரமசிவம்(50)என்பவருக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இராஜேஸ்வரிக்கும் முத்துபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து ராஜேஸ்வரியும்,முத்துபாண்டியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜேஸ்வரி,முத்துபாண்டி இருவரும் பேசி நேற்று சமாதானமான நிலையில் இருவரும் சேர்ந்து வாழ்வதாக முடிவெடுத்து ராஜேஸ்வரி வாடைகை வீட்டை காலி செய்து முத்துபாண்டியின் சொந்த ஊரான ரெட்டியாப்டடிக்கு செல்வதாக முடிவெடுத்த நிலையில் ராஜேஸ்வரி இன்று காலை கழுத்து அறுபட்ட நிலையில் வாடகை வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். 

இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் ஏழாயிரம்பண்ணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏழாயிரம்பண்ணை போலீசார் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்கள். விசாரணையில் ராஜேஸ்வரிக்கும், சங்கரநத்தம் பகுதியைச் சேர்ந்த பரமசிவத்திற்க்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும்.இருவருக்கும் சமீபத்தில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.மேலும் போலீஸார் நடத்திய விசாரணையில் பரமசிவம் தான் ,ராஜேஸ்வரியை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு தலைமறைவாகியது தெரியவந்தது.மேலும் இச்சம்பவம் குறித்து ராஜேஸ்வரியின் கணவர் முத்துப்பாண்டியிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Tags :

Share via