மதுசூதனன் உடல்நலம் பற்றி நேரில் சென்று கேட்டறிந்த சசிகலா,எடப்பாடி பழனிசாமி

by Editor / 20-07-2021 01:08:52pm
மதுசூதனன் உடல்நலம் பற்றி நேரில் சென்று கேட்டறிந்த சசிகலா,எடப்பாடி பழனிசாமி

மதுசூதனன் உடல் நலம் பற்றி விசாரிக்க சசிகலா அப்பல்லோ மருத்துவமனை வருகை தந்துள்ளார். அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் தன்னுடைய வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அவர் வருகை தந்தார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியும் அப்பல்லோ மருத்துவமனையில் மதுசூதனன் உடல் நலம் பற்றி விசாரிக்க மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஒரே நேரத்தில் ஈபிஎஸ் மற்றும் சசிகலா அப்பல்லோ வளாகத்தில் இருப்பதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

முன்னதாக, உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடல் நலக்குறைவும், மூச்சுத்திணறும் தொடர்ந்து இருந்து வந்தது. வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மதுசூதனனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே மதுசூதனன் உடல்நிலை தொடர்பாக வதந்திகளும் பரவின. இது தொடர்பாக விளக்கம் அளித்த அதிமுக, ''கழக அவைதலைவர் திரு. மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம், தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்'' என குறிப்பிட்டிருந்தது.

 

Tags :

Share via