தூக்கில் பிணமாக தொங்கிய திருநங்கையுடன் தங்கியிருந்த வாலிபர் திடீர் தற்கொலை

by Admin / 24-07-2021 09:14:42pm
தூக்கில் பிணமாக தொங்கிய திருநங்கையுடன் தங்கியிருந்த வாலிபர் திடீர் தற்கொலை

 



திருவனந்தபுரம் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய திருநங்கையுடன் தங்கியிருந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கேரள மாநிலம் கொச்சியை அடுத்த எடப்பள்ளியை சேர்ந்தவர் அனன்யா குமாரி அலெக்ஸ் (வயது28). திருநங்கையான இவர் எடப்பள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.கேரளாவின் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கி என்ற சிறப்பை பெற்ற இவர், செய்தி வாசிப்பாளர், மேக்கப் கலைஞர் என்று பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்தார். இவர் கேரளாவில் திருநங்கைகளின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் ஏழுப்பி வந்தார்.


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பள்ளியில் உள்ள அவரது அடுக்கு குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கருதப்பட்டது. இது குறித்து களமசேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனன்யா குமாரி அலெக்ஸ் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், அவரது சாவுக்கு நீதி கேட்டும் கேரளாவில் திருநங்கைகள் மற்றும் மாற்று பாலினத்தினர் பலரிவட்டோம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்இதையடுத்து அனன்யா குமாரி அலெக்ஸ் சாவு குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் நட்பாக பழகியவர்கள், தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அனன்யா குமாரி அலெக்சுடன் தங்கி இருந்த திருவனந்தபுரம் ஜெகதீ பகுதியை சேர்ந்த ஜிஜூராஜ் (36) என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.அனன்யா குமாரி அலெக்ஸ் தேர்தலில் போட்டியிட்ட போது ஜிஜூ ராஜூடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்பு ஜிஜூராஜ், அனன்யா குமாரி அலெக்சுடன் சென்று தங்கினார்.

இந்நிலையில் தான் அனன்யா குமாரி அலெக்ஸ் தூக்கில் பிணமாக தொங்கினார்.அவரது இறுதி சடங்கில் பங்கேற்ற ஜிஜூராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பே திருவனந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அங்கு வைத்து அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநங்கை அனன்யா குமாரி அலெக்சின் பிரேத பரிசோதனை முடிவு இதுவரை வெளிவரவில்லை.அவரது சாவு குறித்து முழுமையான விவரம் தெரிய வருவதற்குள் அவருடன் தங்கி இருந்த வாலிபர் ஜிஜூராஜ் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via