மத்தூர் அருகே வி‌ஷ பாம்பு கடித்து 3 வயது குழந்தை பலி

by Admin / 29-07-2021 03:02:07pm
மத்தூர் அருகே வி‌ஷ பாம்பு கடித்து 3 வயது குழந்தை பலி



மத்தூர் அருகே வி‌ஷ பாம்பு கடித்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பெரமகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சிங்கார வேலன். விவசாயி. இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு நீத்திஷ் (வயது 5) என்ற மகனும், தன்சிகா (3) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி தன்சிகா நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள மல்லிகை பூந்தோட்டத்தின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை தன்சிகாவை வி‌ஷ பாம்பு கடித்துள்ளது.

இதனையடுத்து குழந்தை அழுகை சத்ததால் புனிதா விரைந்து வந்து பார்த்தார். அப்போது குழந்தைக்கு பாம்பு கடித்தது தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு தன்சிகாவை சேர்த்தனர். அங்கு டாக்டர்கள், குழந்தை தன்சிகாவை பரிசோதித்து பார்த்து ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றார்.
வி‌ஷ பாம்பு கடித்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via