ஆக.2 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்

by Editor / 30-07-2021 10:38:56am
ஆக.2 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்

பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றி நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 2 முதல் தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகம் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via