பெண் பாலியல் பலாத்காரம்; மாணவருக்கு 10 ஆண்டு சிறை

by Admin / 30-07-2021 02:44:13pm
பெண் பாலியல் பலாத்காரம்; மாணவருக்கு 10 ஆண்டு சிறை



கடலுார் : இளம்பெண்ணை காதலித்து பலாத்காரம் செய்து, திருமணத்திற்கு மறுத்த பல்கலைக்கழக மாணவருக்கு கடலுார் கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் அருண்குமார், 24; இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு 16ம் தேதி அப்பெண் வீட்டில் தனியாக இருந்த போது கட்டாயப்படுத்தி அருண்குமார் பாலியல் பலாத்காரம் செய்தார்

. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அருண்குமாரிடம் அப்பெண் கேட்டுள்ளார். அதற்கு மறுத்து, அவரை ஆபாசமாக திட்டி, மிரட்டல் விடுத்தார்.இது குறித்து புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து அருண்குமாரை கைது செய்து, கடலுார் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்

. வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டப்பட்ட அருண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அருண்குமார் சிதம்பரம் பல்கலையில் முதுகலை படித்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் செல்வபிரியா ஆஜராகி நடத்தினார்.

 

Tags :

Share via