குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார்.

by Editor / 02-08-2021 02:34:29pm
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார்.

 

இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.


இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு புறப்பட்ட இந்திய குடியரசு தலைவர் சற்றுமுன் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அவரை தமிழக ஆளுநர், முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்று உள்ளனர்.
 
விமான நிலையத்தில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சாலை மார்க்கமாக வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு ஓய்வெடுக்கிறார். பின்னர் அங்கிருந்து மாலை நான்கு முப்பது மணி அளவில் சாலை மார்க்கமாக தமிழக சட்ட மன்ற விழாவின் அரங்கிற்கு வருகை தர உள்ளார்.


குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மாலை 5 மணிக்கு தமிழக சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்திருக்கிறார். பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கிவிட்டு, நாளை (3ஆம் தேதி) விமானம் மூலம் சென்னையில் இருந்து கோயமுத்தூர் புறப்படுகிறார்.

 

Tags :

Share via