நரம்பியல் மருத்துவர் கொலை வழக்கின் தீர்ப்பு: ஆகஸ். 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

by Editor / 03-08-2021 03:39:16pm
நரம்பியல் மருத்துவர் கொலை வழக்கின் தீர்ப்பு: ஆகஸ். 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நரம்பியல் மருத்துவர் கொலையில் 
 தீர்ப்பு  4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு


பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கின் தீர்ப்பை, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் 4 ம் தேதி தள்ளிவைத்தது.

2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதுதொடர்பாக சுப்பையாவின் உறவினர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல் துறையினர், ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.


வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினம்தோறும் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண லக்ஸ்மனராஜு, ரகுநாதன், சந்திரசேகர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டன. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

 

Tags :

Share via