காதல் தோல்வியால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

by Admin / 03-08-2021 03:31:42pm
காதல் தோல்வியால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை



   
காதல் தோல்வியால் வி‌ஷம் குடித்த அசோக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

ராஜாக்கமங்கலம் அருகே கோயில் புறத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 30), இவர் கூலி வேலை செய்து வந்தார்.

 இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் அசோக்குமார் மனமுடைந்தார். சம்பவத்தன்று இரவு இவர் யாருமில்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

இதைப்பார்த்த அவரது சகோதரர் உடனடியாக அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அசோக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அசோக் குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

 

Tags :

Share via