பழசை  மறக்கலாமா ? இதே நாளின் நடந்த நிகழ்வுகள்

by Editor / 20-08-2021 05:11:13pm
பழசை  மறக்கலாமா ?  இதே நாளின் நடந்த நிகழ்வுகள்


1140 – சொங் சீனத் தளபதி யூ பெய் படையினர் சின் சீனப் படையினரை சொங்–சி போரில் வென்றனர்.
1331 – மூன்றாம் இசுடெபான் உரோசு மன்னர் அவரது மகன் துசானிடம் சரணடைந்தார். துசான் செர்பியாவின் மன்னராக முடி சூடினான்.
1680 – புவெப்லோ இந்தியப் பழங்குடிகள் எசுப்பானியாவிடம் இருந்து சாந்தா பே நகரைக் கைப்பற்றினர்.
1770 – ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.
1772 – சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் தான் மேற்கொண்ட இராணுவப் புரட்சியை முடித்துக் கொண்டு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி, அரை நூற்றாண்டுக் கால நாடாளுமன்ற ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிரெஞ்சுக் குடியேற்றமான பாண்டிச்சேரியை முற்றுகையிட்டனர்.
1791 – எயித்தியில் இடம்பெற்ற வூடூ பண்டிகை அடிமைகளின் கிளர்ச்சியாக மாறியதை அடுத்து எயித்தியப் புரட்சி ஆரம்பமானது.
1808 – ஆர்தர் வெல்லசுலி தலைமையிலான பிரித்தானிய, போர்த்துக்கீசப் படையினர் பிரெஞ்சுப் படையினரை போர்த்துகலில் விமெய்ரோ கிராமத்தில் நடந்த சமரில் வென்றனர்.
1821 – ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
1831 – வர்ஜீனியாவில் அமெரிக்கக் கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார். இதன் போது 55 முதல் 65 வெள்ளையர்கள் கொல்லப்பட்டனர்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கேன்சசு மாநிலத்தில் லோரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.
1888 – முதலாவது வெற்றிகரமான கூட்டல் கருவி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
1911 – லியனார்டோ டா வின்சியின் மோனா லிசா ஓவியம் பாரிசின் இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.
1920 – ஏ. சபாபதி ஓய்வு பெற்றதை அடுத்து சேர் அ. கனகசபை இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவானார்.[1]
1942 – இரண்டாம் உலகப் போர்: உருசியாவின் எல்பிரஸ் மலை உச்சியில் நாட்சி ஜெர்மனியின் கொடி நாட்டப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: கனடிய, போலந்துப் படைகள் பிரான்சின் முக்கிய நகரான பலேசைக் கைப்பற்றின.
1957 – சோவியத் ஒன்றியம் ஆர்-7 என்ற முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது.
1959 – அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் அவாயை அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கும் ஆணைக்கு கையெழுத்திட்டார்.
1963 – தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்தத் தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.
1971 – பிலிப்பீன்சு, மணிலாவில் லிபரல் கட்சி தேர்தல் பிரச்சாரத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் மார்க்கோசுக்கு எதிரான பல வேட்பாளர்கள் காயமடைந்தனர்.
1982 – லெபனான் உள்நாட்டுப் போர்: லெபனானில் இருந்து பலத்தீன விடுதலை இயக்கத்தினர் வெளியேறுவதைக் கண்காணிக்க பன்னாட்டுப் படையினர் பெய்ரூத் வந்து சேர்ந்தனர்.
1983 – பிலிப்பீன்சு எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.
1986 – கமரூனில் நியோஸ் ஏரி எரிமலையில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 20 கிமீ சுற்றளவில் 1,800 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1988 – நேபாள-இந்திய எல்லைப்புறத்தில் 6.9 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றதில் 1,450 பேர் வரை இறந்தனர்.
1991 – லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1991 – சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.
1993 – நாசா மார்சு ஒப்சர்வர் விண்கலத்துடனான தொடர்பை இழந்தது.
1994 – மொரோக்கோவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 44 பேரும் உயிரிழந்தனர்.[2]
1995 – அமெரிக்காவில் சியார்ச்சியா மாநிலத்தில் பிரேசில் வானூர்தி ஒன்று தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 29 பேரில் 9 பேர் உயிரிழந்தனர்.[3]
2007 – சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.
2013 – சிரியாவில் கோட்டா என்ற இடத்தில் வேதித் தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
2014 – பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேலிய வான் தாக்குதல்களில் ஹமாஸ் இயக்கத்தின் மூன்று மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர்.
2014 – குவாத்தமாலாவில் பெல் 206 உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஐந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

 

Tags :

Share via