மருமகனை கொலை செய்ய மகன்களுடன் சேர்ந்து மாமனார் திட்டம்- வெடிபொருட்களை வீட்டில் பொருத்திய மைத்துனன்களால் பரபரப்பு
திருப்பத்தூர் அருகே சொத்து தகராறு காரணமாக, தங்கையின் குடும்பத்தை கொல்ல, அண்ணன்களே ஜெலட்டின் வெடி குண்டு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கொண்டநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் -அனிதா இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், அனிதாவின் தந்தை ராஜா, தனது நிலத்தை விற்க முடிவு செய்ததை அறிந்த நரசிம்மன், நான்காவது தரப்பைச் சேர்ந்தவர் போல அந்த நிலத்தை வாங்கியுள்ளார்.
இதையறிந்த அனிதாவின் அண்ணன்களான கார்த்திக், யுவராஜ் இருவரும் நிலத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் நரசிம்மன் நிலத்தை கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அண்ணன்கள் இருவரும், தங்கையின் வீட்டின்மேல் நாட்டு வெடி குண்டுகளை வைத்துள்ளனர்.
சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த நரசிம்மன், நாட்டு வெடிகொண்டுகளை வெடிக்க வைக்க தயார் செய்து கொண்டிருந்த இருவரையும் பிடிப்பதற்குள் அவர்கள் தப்பியோடியுள்ளனர். உடனடியாக வெடிகுண்டுகளை செயலிழக்க செய்த நரசிம்மன், போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
Tags :