டிராக்டர் ஓட்டிய பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு

by Editor / 22-08-2021 10:33:14am
டிராக்டர் ஓட்டிய பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் மேகதாது அணை நிச்சயம் கட்டப்படும் என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழக அனைத்து கட்சி குழு டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியது. அதேசமயம் மேகதாது அணை விவகாரத்தில் தஞ்சாவூரில் தமிழக பாஜகவை சேர்ந்தவர்கள் கர்நாடக பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இந்த சூழலில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் டிராக்டர் ஓட்டிச் சென்று நேற்று போராட்டம் நடத்தினார். போராட்டத்தில் விஜயபிரபாகரன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரேமலதா, “கர்நாடக முதலமைச்சருக்கு எச்சரிக்கையுடன் வேண்டுகோள்; ஓசூர் எல்லைவரை வந்துவிட்டோம், பெரும்படை திரட்டி பெங்களூக்குள் நுழைய முடியும், நமக்குள் பிரிவினை வேண்டாம் என தமிழக விவசாயிகள் சார்பில் கூறிக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஓசூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் உட்பட 349 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கர்நாடக அரசை கண்டித்து டிராக்டர் ஓட்டி போராட்டம் நடத்திய பிரேமலதா விஜயகாந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஓசூரில் மேகதாது அணைக்கு எதிராக போராட்டம் நடத்திய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓசூரில் கொரோனா விதிகளை மீறி போராட்டம் நடத்தியதாக நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via