மாநில அரசுக்கு கிடைத்த அடுத்த அறை... அடுத்த சர்ச்சையை தொடங்கிய பா.ஜ.க. மூத்த தலைவர்...

by Admin / 25-08-2021 12:31:55pm
மாநில அரசுக்கு கிடைத்த அடுத்த அறை... அடுத்த சர்ச்சையை தொடங்கிய பா.ஜ.க. மூத்த தலைவர்...

மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது மாநில அரசுக்கு கிடைத்த மற்றொரு அரை என பாஜக மூத்த தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் பேசியது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் நாராயண் ரானேவை கைது செய்தனர். விசாரணைக்கு பின் அமைச்சர் நாராயண் ரானே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது காவல்துறை மற்றும் குண்டர்களின் உதவியுடன் நடத்தப்படும் மாநில அரசின் முகத்தில் விழுந்த மற்றோரு அரை போன்றது என மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார்.

 

Tags :

Share via