இப்படிக்கூட அஞ்சலி செலுத்தலாம்... ஆஸ்திரேலிய விவசாயியின் புதுமை...

by Admin / 27-08-2021 03:19:39pm
இப்படிக்கூட அஞ்சலி செலுத்தலாம்... ஆஸ்திரேலிய விவசாயியின் புதுமை...

ஆஸ்திரேலியாவில், விவசாயி ஒருவர் தனது அத்தைக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக, தனது செம்மறி ஆடுகளை இதய வடிவில் சூழ்ந்து நிற்க செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
 
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா  காரணமாக, கடந்த ஓராண்டுக்கு மேலாக மக்கள், உறவினர்களுடன் நெருக்கமான நிகழ்வுகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவில் உயிரிழந்தவர்கள் சடலத்தை கூட நேரில் பார்க்க முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில், உடல்நலக் குறைவால் உயிரிழந்த தனது அத்தையை நேரில் பார்க்க முடியாததால் மன வருத்தத்தில் இருந்த ஆஸ்திரேலியா விவசாயி பெஞ்சமின் என்பவர், அவருக்கு வித்தியாசமான முறையில் இறுதி அஞ்சலி செலுத்த முற்பட்டுள்ளார்.

 இதற்கென பரந்த வெளியில், தானியங்களை இதய வடிவில் தூவி, செம்மறி ஆடுகளை மேயவிட்டுள்ளார். இந்த காட்சிகளை பின்னர் டிரோன் கொண்டு பதிவு செய்திருந்த அவர், இந்த காட்சிகளின் பின்னணி இசையாக அவரது அத்தைக்கு பிடித்தமான பாடலையும் ஒளிப்பரப்பியுள்ளார்.

 

Tags :

Share via