சென்னையில் 200 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு

by Editor / 04-09-2021 09:54:12am
சென்னையில்  200 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு

ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளே சென்னை வேப்பேரி -கொரட்டூர் புறநகர் மின்சார ரயிலில் இரண்டு கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு, கைகலப்பு ஆகியது.

மேலும், கல்லூரிகள் திறந்த முதல் நாளே பேருந்து தினம் கொண்டாட கல்லூரி மாணவர்கள் திட்டமிட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்னை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் கல்லூரி பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், சென்னையில் கொரோனா நோய்க்கட்டுப்பாட்டு விதிகளை மீறி ஊர்வலம் நடத்தியதாக, சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

 

Tags :

Share via