சென்னையில் போக்குவரத்து மாற்றம்

by Editor / 13-09-2021 09:42:01am
சென்னையில்  போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயிலில் 2 ஆம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கம், பவர் ஹவுஸ், ஆற்காடு சாலை 80 அடி சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் இன்று ஓராண்டுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் ஏதுமில்லை. கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக போரூர் சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவுர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று, இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று, வலது புறம் திரும்பி, 2-வது அவென்யூ சாலை வழியாக, 100 அடி சாலை சந்திப்புவரை சென்று, நேராகவும் ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை, 80 அடி சாலை வன்னியர் சாலை வழியாக போரூர் சாலிகிராமம் செல்லலாம்.

கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக -அம்பேத்கர் சாலை-அசோக் நகர் காவல் நிலையம் – 2-வது அவென்யூ சாலை- 100 அடி சாலை வழியாக சென்று வடபழனியை அடையலாம். அசோக் பில்லர் மற்றும் கோடம்பாக்கம் செல்லும் வாகனங்கள் , அம்பேத்கர் சாலை , அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்புவரை சென்று, இடதுபுறமாக 2-வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via