சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரியங்கா

by Editor / 19-09-2021 10:59:04am
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரியங்கா

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 8 ஒளிபரப்பாகி வருகிறது, அதுவும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. தற்போது வைலட் கார்டு ரவுண்ட் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி ஆகிய இருவரும் வெற்றி பெற்று சூப்பர் சிங்கர் சீசன் 8-ன் இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.

இந்த சீசனில் ஜெயிக்கப்போவது யார் என்ற கருத்துக் கணிப்புகளும் நிறைய நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்தத்துடன் பிரியங்கா தொகுத்து வந்த நிலையில் தற்போது பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். தொகுப்பாளினி பிரியங்கா விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்ப உள்ள பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். மேலும் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் ஷோவில் கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பலவிதமான சுவாரஸ்யமான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இதற்கான பதில் கிடைத்துவிடும். இதனிடையே போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதில், குக் வித் கோமாளியில் பங்கேற்ற கனி, சுனிதா, பாபா பாஸ்கர், ஷகிலாவின் மகள் மிளா ஆகியோரது பெயர்கள் அடிபடுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ஜிபி முத்து, செய்தி வாசிப்பாளர் கண்மணி, விஜய் டிவி தொகுப்பாப்பார் விஜே பப்பு உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via