வக்கீல்கள் இன்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பு

by Editor / 21-09-2021 01:33:43pm
வக்கீல்கள் இன்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பு

நாமக்கல்லில் வக்கீல்கள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். இது குறித்து தமிழ்நாடு, புதுச்சேரி குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் காமராஜ், நாமக்கல் குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் அய்யாவு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் சி.எஸ்.ஆர்., மற்றும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதற்கு எஸ்.பி.,யிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதனால் வழக்கு விபரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. நாமக்கல் குற்றவியல் வக்கீல்கள் சங்கத்தின் பொருளார் அய்யப்பனுக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் நாமக்கல் மாவட்ட அனைத்து வக்கீல்கள் சங்கங்கள் முதல் கட்டமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு பணி புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்

 

Tags :

Share via