தென்காசி மாணவிக்கு கனிமொழி எம்.பி பாராட்டு
தென்காசி அலங்கார் நகரைச் சேர்ந்த ஈஸ்வரராஜ்-கோமதி தம்பதியினரின் மகள் சண்முகவள்ளி பி. இ பட்டாதாரியான இவர் கடந்த 2020-ல் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108-வது இடத்தையும் தமிழக அளவில் 3-வது இடத்தையும் பெண்கள் பிரிவில் தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார்.
அவரை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் அவரது இல்லத்திற்கு சென்று பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், உடன் கழக நிர்வாகிகள்; பலர் கலந்து கொண்டனர்
Tags :