காந்தி ஜெயந்தி; ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

by Editor / 02-10-2021 11:12:36am
காந்தி ஜெயந்தி; ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி, காங்., முன்னாள் தலைவர் சோனியா உள்ளிட்டவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடி அவரது டுவிட்டரில் ;" தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பணிவான வணக்கங்கள். பாபுவின் வாழ்க்கை மற்றும் இலட்சியங்கள் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையையும் கடமையின் பாதையில் நடக்க ஊக்குவிக்கும். " என பதிவிட்டுள்ளார்.சென்னையில் காமராஜர் சாலையில் வைக்கப்பட்டுள்ள காந்தி உருவப்படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via