புதுச்சேரியிலிருந்து திட்டக்குடிக்கு சாராயம் கடத்தல்... ரூ.50 மதிப்புள்ள சாராயம் பறிமுதல்...

by Admin / 04-10-2021 11:47:48pm
புதுச்சேரியிலிருந்து திட்டக்குடிக்கு சாராயம் கடத்தல்... ரூ.50 மதிப்புள்ள சாராயம் பறிமுதல்...


புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர் அப்போது திட்டச்சேரி போலீசார் குத்தாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக 1 மோட்டார்சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
 
சோதனையில் மோட்டார் சைக்கிள்களில்  2மூட்டைகளில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சாராய பாட்டில்கள் இருந்தன. உடனே போலீசார் மோட்டார் சைக்கிள்களில் வந்த நாகூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த  சுந்தரமூர்த்தி ,பெருங்கடம்பனூர் ஜீவா தெருவை சேர்ந்த  மணிகண்டன்  2 பேரும் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மோட்டார் சைக்கிள்களில் மதுபானங்களை கீழ்வேளூர் பகுதிகளுக்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதைதொடர்ந்து திட்டச்சேரி போலீசார் 2 பேரையும் கைது செய்து அவரிடம் இருந்து 2 மூட்டை சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

 
 
 

Tags :

Share via