பஜ்ஜி சாப்பிட்ட 2 பேர் பலி

by Editor / 06-10-2021 10:29:40am
பஜ்ஜி சாப்பிட்ட 2 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் ஹீதளி கிராமத்தில் பார்வதி(55)யும், அவரது மகன் சோமலிங்கப்பாவும்(28)வும் வசித்து வந்துள்ளார்கள்.

வழக்கம் போல் இவர்கள் தங்களது தோட்டத்தில் வேலை செய்துவிட்டு மாலையில் வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டிற்கு வந்ததும் சுடச்சுட பஜ்ஜி செய்து சாப்பிட்டுள்ளனர். பஜ்ஜி சாப்பிட்ட சிறிது நேரத்தில் இரண்டு பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. தாயும் மகனும் மயங்கிக்கிடந்ததை பார்த்துவிட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பெலகாவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். ஆனால், மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.இந்த சம்பவத்தில் மரியாளா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே தாய் -மகனின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.

 

Tags :

Share via