நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை

by Editor / 18-10-2021 05:10:36pm
நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சுட்டுக் கொலை



உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பின்னர், அவர் வழக்கறிஞர் பூபேந்திர சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது உடல் நீதிமன்ற வளாகத்தின் மூன்றாவது மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது.


எனினும், கிடைத்த அறிக்கைகளின் படி, வழக்கறிஞர் பூபேந்திர சிங் நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில் உள்ள ACJM அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரது உடலின் அருகே கைத்துப்பாக்கி காணப்பட்டதாகவும், சம்பவத்தின் போது அலுவலகத்தில் அவருடன் யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், "எங்களுக்கு கொலை சம்பவம் குறித்து விவரம் ஏதும் தெரியாது. நாங்கள் கோர்ட்டில் இருந்தோம். ஒருவர் வந்து எங்களிடம், வழக்கறிஞர் ஒருவர் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக கூறினார். நாங்கள் பார்க்க வந்தபோது, இறந்த உடலையும், அதற்கு அருகில் ஒரு நாட்டுத் துப்பாக்கியையும் கண்டோம்" என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via