துரை வைகோவுக்கு முக்கிய தலைவர் விலகல்

by Editor / 21-10-2021 03:11:18pm
துரை வைகோவுக்கு முக்கிய தலைவர் விலகல்

வைகோ தனது மகனுக்கு கட்சிப் பதவியை வழங்கியதை, பொறுப்பில் உள்ள நிர்வாகிகளில் பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டாலும், அடிமட்டத்தில் உள்ள கட்சி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா?, இவ்விவகாரம் தொடர்பாக அவர்களது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பது பின்னரே தெரியவரும். இதற்கிடையே, துரை வைகோவுக்கு கட்சிப் பதவி வழங்கியதற்கு முதல் முதலாக மாநில நிர்வாகியிடம் இருந்தே எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது.


கோவையைச் சேர்ந்தவர் வே.ஈஸ்வரன். இவர், மதிமுக மாநில இளைஞரணி செயலராக உள்ளார். அரசியல் கட்சி போராட்டங்களைத் தவிர, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், சுற்றுச்சூழலுக்கு ஆதரவாகவும், சமூகநலனுக்கு ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.


மதிமுக மட்டுமின்றி, பல்வேறு கட்சியிலும் அவருக்கு நன்கு அறிமுகம் உள்ளது. தொண்டர்களிடமும் நன்கு அறிமுகம் உள்ளவர் வே.ஈஸ்வரன். மதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில் வே.ஈஸ்வரன் கலந்து கொள்ளாத சூழலில், துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டதையும், அடுத்த அரசியல் தலைவர் என்று சுட்டிக் காட்டப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, மதிமுகவில் இருந்த விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via