தீபாவளி ஷாப்பிங்: சென்னையில் குவிந்த மக்கள்

by Editor / 24-10-2021 08:12:23pm
தீபாவளி ஷாப்பிங்: சென்னையில் குவிந்த மக்கள்

நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் தீபாவளிக்கு வேண்டிய துணிமணிகளை வாங்கி வருகின்றனர். அந்த வகையில், இந்த வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை வண்ணாரப்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தீபாவளிக்கு வேண்டிய துணிகளை வாங்க குவிந்தனர்.அதனையொட்டி, ராயபுரம் குல்வார் அக்ரம் சாலையில் சமூக இடைவெளியையும் மறந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்க அலை மோதினர்.


பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கொரோனோ நோய் பரவலை தடுத்திடும் வகையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதையொட்டி அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
 

 

Tags :

Share via