பசும்பொன்   குருபூஜையை முன்னிட்டுமதுரை மாவட்டத்தில்  போக்குவரத்து மாற்றம்

by Editor / 28-10-2021 05:13:45pm
பசும்பொன்   குருபூஜையை முன்னிட்டுமதுரை மாவட்டத்தில்  போக்குவரத்து மாற்றம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 114 வது ஜெயந்தி மற்றும் 59 வது குருபூஜை தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில்  போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது.

தேனி மற்றும்  திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மதுரை மாநகர் வழியாக வந்து ராமநாதபுரம் சுற்றுச் சாலை வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். 

 திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் மேலூர், ஒத்தக்கடை ராம்நாடு ரோடு நான்கு வழி சாலை வழியாக பசும்பொன் செல்லவும் அல்லது மேலூர் சிவகங்கை ரோடு வழியாக பசும்பொன் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை ரெட்டியார்பட்டி வழியாக பசும்பொன் செல்ல வேண்டும்.
 தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் சாயல்குடி கோவிலாங்குளம் அல்லது  அருப்புக்கோட்டை ரெட்டியார்பட்டி வழியாக பசும்பொன் செல்லவேண்டும்.


 திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வாகனங்கள் அருப்புக்கோட்டை ரெட்டியார்பட்டி அல்லது தூத்துக்குடி சூரங்குடி சாயல்குடி வழியாக பசும்பொன் செல்ல வேண்டும்.

 

Tags :

Share via