கோவை புதிய போலீஸ் கமிஷனராக பிரதீப்குமார் பதவியேற்றுக்கொண்டார்.

by Editor / 20-11-2021 06:30:40pm
கோவை புதிய போலீஸ் கமிஷனராக பிரதீப்குமார்  பதவியேற்றுக்கொண்டார்.

கோவை போலீஸ் கமிஷனராக தீபக் தாமோர் பணியாற்றி வந்தார்.18ஆம் த்தேதி தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு சிலருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது. இதில் சென்னையில் பணியாற்றி வந்த பிரதீப் குமார் கோவை கமிஷனராக மாற்றப்பட்டர்.இதனைத்தொடர்ந்து இன்று 
கோவை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்ட பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவை  சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரமாகும் வட மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும்  வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என பாகுபாடின்றி  அனைவரும் இங்கு ஒன்றாக சேர்ந்து பணிபுரிகிறார்கள்.
சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்,மற்றும் குற்றச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்,துரித நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் போக்குவரத்து நெரிசலை  சமாளிக்க ஆய்வுப் பணி மேற்கொண்டு அவைகளின் பிரச்சனை சரிசெய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
 

 

Tags :

Share via