4 மணி நேரம் சாலை மறியலில்.

by Admin / 20-11-2021 08:31:40pm
 4 மணி நேரம் சாலை மறியலில்.

 


 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி தாளாளரை கைது செய்யக்கோரி, மாணவ-மாணவிகள் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லை சேர்ந்த தொழிலதிபர் ஜோதி முருகன்,  சுரபி, கபி, ராமபிரபா உள்ளிட்ட பெயரில் நர்சிங் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை நடத்தி வருகிறார். கல்லூரி மாணவிகளுக்கு அவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், அதற்கு விடுதி வார்டன் அர்ச்சனா உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.வெகுண்டெழுந்த மாணவ-மாணவிகள், கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனாவை கைது செய்த போலீசார், தலைமறைவான கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை தேடி வருகின்றனர்.விடுதிக் காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்வதாகக் கூறி, மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர்.

 

Tags :

Share via