சின்ன..சின்ன..செய்திகள்..சில வரிகளில்...

by Editor / 23-11-2021 02:11:52pm
சின்ன..சின்ன..செய்திகள்..சில வரிகளில்...

உசிலம்பட்டியில் ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாகக் கூறி கார்டை மாற்றி மோசடியில் ஈடுபட்ட டெல்லி கணேஷ் (31) என்பவா் கைது செய்யப்பட்டார்.ரூ 2.50.000 பணம் பறிமுதல்.

கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்து மீறிய வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட திண்டுக்கல் சுரபிக் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் வெங்கடேசன் முன் கோர்ட்டில் சரணடைந்தார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக பயிர் சேத பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கு மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புத்தூர் அரசு கலைக் கல்லூரிக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து பயிர் சேதம் தொடர்பாக காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டு வருகின்றனர். 

தண்டையார்பேட்டை மின்வாரிய  இளநிலை மின் பொறியாளராக பணிபுரிந்த கணேசன் கடந்த 2014ஆம் ஆண்டு சுந்தரம் என்பவரது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க 2700 ரூபாய் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால்  கைது செய்யப்பட்டவழக்கில்   திருவள்ளூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேலரஸ் குற்றவாளிக்கு 3 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


கொரோனாவுக்கு உலக அளவில் 5,173,778 பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51.73 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,173,778 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 258,334,967 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 233,759,508 பேர் குணமடைந்துள்ளனர்.

திருச்சி எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறார்களுக்கும் 15 நாட்கள் காவல்
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைதான 2 சிறார்களுக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது . இரண்டு சிறார்களும் புதுக்கோட்டையில் உள்ள சிறார் நீதிமன்றம் குழுமத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிறார் நீதி குழு நீதிபதி அறிவு உத்தரவை அடுத்து, இருவரும் திருச்சி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.


சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்! : முதல்வர் ஸ்டாலின்.
சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் பைனலில் நடப்பு சாம்பியன் தமிழ்நாடு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகாவை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது.


சென்னை நகரில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் 150 வரை விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திராவில் மழை பெய்து வருவதால் அங்கிருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. மழை காலத்தில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via