இலங்கையில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

by Admin / 25-11-2021 10:30:00pm
இலங்கையில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

இலங்கையில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.

இலங்கை திரிகோணமலையில் உள்ள குறிஞ்சங்கேணிகிராமத்தில் இருந்து, கின்னியா நகருக்கு நேற்று காலை படகு ஒன்று  சென்றது.  படகில் பள்ளி மாணவர்கள் உள்பட 20-க்கும் அதிகமானோர் பயணித்தனர்.படகு கின்னியா நகரை நெருங்கி கொண்டிருந்தபோது நீரில் கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.  தகவல் கிடைத்ததும் இலங்கை கடற்படையினர்  சம்பவ இடத்துக்கு விரைந்த.மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

 பள்ளி மாணவர்கள் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Tags :

Share via