நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.
நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூடியது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி வருகிற டிசம்பர் 23 ம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை சட்டத்திற்கு எதிரான மசோதா நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய பிரச்னைகள் குறித்து அனைத்து கட்சியினருடன் கலந்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. குளிர்கால தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள் , எதிர்க்கட்சிகளின் கேள்விகள் குறித்து முன்கூட்டியே கேட்டு அறியப்படும் .அமைதியான முறையில் நடத்துவதற்கு எதிர்கட்சிகளிடம் ஒத்துழைப்பும் கோரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :