வருமுன் காப்போம்....

by Editor / 05-12-2021 12:45:40pm
வருமுன் காப்போம்....


இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருந்தவர்களுக்கு எல்லாம்.
கொரோனா சரியான பாடம் கற்றுத் தந்து உள்ளது, இன்னும் கூட கொரோனா கற்றுத்தந்த பாடத்தை உணரத் தவறியவராக நீங்கள் இருந்தால்..
ஓ..‌ நீங்கள் மனித இனமே மில்லை.... அதையும் தாண்டி அதையும் தாண்டி.. என்றுதான் குறிப்பிட வேண்டும்.

தற்போது கொட்டியும் வரும்
 கனமழை பெரு வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பை விட கொரோன
 ஏற்படுத்திய பாதிப்பு கொஞ்சம் நஞ்சமில்லை...

எதையும் வருமுன் காக்க வேண்டிய அரசு கண்டிப்பாக வந்தபின் அரசு காப்பாற்றும் என்று நீங்கள் நினைத்தால்... நீங்கள் தமிழ் நாட்டவர் அல்ல...
அரசு அறிவித்த சில அறிவிப்புகளில் ஒன்று நமக்கு நாமே அதாவது தன் கையே தனக்கு உதவி என்பதைப்போல

நாம்தான் நம்மையும் நமது சந்ததிகளையும் காத்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான காலச் சூழ்நிலையை நாம் உள்ளோம்.
 கொரோனா இருக்கிறதா..? இல்லையா..? என்று பல.. பல பட்டிமன்றங்கள் இந்த நிமிடம் வரை நடந்துகொண்டிருக்கிறது. 
அதில் அரசு தரப்பில் கொரோனா வைரஸ் பற்றிய அறிவியல் ஆய்வுகள் இல்லை என்று கூட கொஞ்சம் கூட தயங்காமல் தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வியில்.. பதில் தகவல்களை தந்து கொண்டிருக்கிறது.

 ஆனால் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டுதானே இருக்கிறது.
 இந்த கண்ணாமூச்சி விளையாட்டில் நாம் என்ன செய்ய வேண்டும் அதற்கு ஒரே வழி.

நமது ஆரோக்கியம் நமது கையில்...
 உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்... என்ற பாரம்பரிய மருத்துவ அறிவியல் கொள்கைப்படி நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்...

இதோ கொரோனாவை தொடர்ந்து.. கொரோனாவின் உடன் பிறப்பு... சகோதரி டெல்டா வந்துவிட்டாள்....! டெல்டா வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்.... என்று வழக்கம் போல் உலக சுகாதார துறைகளும் ஊடகங்களும் கூவத் தொடங்கி விட்டது.

உடன்பிறப்பு டெல்டா வைரஸ்... இவளிடமிருந்து நாம் எப்படி நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும்...?
நமது பாரம்பரியமான பழக்க வழக்க முறைகளே போதும்..!

அதிக காய்ச்சல், இருமல், கடுமையான உடல் வலி, வாயில் கசப்பு, சுவை இழப்பு போன்ற அறிகுறிகள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ளன.

எனவே கண்டிப்பாக குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.

குளிர்ந்த பானங்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்துங்கள்.

வெந்நீர் குடிக்கவும்.

சூடான நீரில் குளிக்கவும்.

சத்துணவாக முட்டைகளை சாப்பிடுங்கள்.

வசதியிருப்பவர்கள் அத்திப்பழம், பாதாம் பருப்பு  சாப்பிடுங்கள்.*

ஏழை எளியோர்களுக்கு எப்போதும் கிடைக்கிறது கிராம்பு, ஏலக்காய் மற்றும் (கறுவாப்)பட்டை இதை சேர்த்து காபி குடிக்கவும்.

ஆட்டுக்கால் சூப் குடிக்கவும், கருப்பு மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.

நாட்டுக் கோழி சூப் குடிக்கவும்,(நாட்டுக்கோழியில் தற்போது டூப்ளிகேட் நாட்டுக்கோழி வந்து விட்டது அதாவது ஹைபிரிட் கோழி) மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்க்கவும்.

கால்சியம் நிறைந்த உணவுகள் அல்லது கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

நிறைய தண்ணீர்   குடிக்கவும்.. அதாவது தாகம் எடுக்கும் போது உடனே தண்ணீர் குடிக்கவும்.

அடிக்கடி  கிராம்புகளை உங்கள் வாயில் போட்டு 5 நிமிடங்கள் மெல்லுங்கள்.

காலையில் சுவையான மூலிகை பானமாக 200 மில்லி தண்ணீரில் மூன்று சிட்டிகை அளவு மிளகுத்தூள், மூன்று சிட்டிகை அளவு மஞ்சள் தூள், மூன்று சிட்டிகை அளவு கல் உப்பு அல்லது இந்து உப்பு, ஒரு இன்ச் அளவு இஞ்சியை நசுக்கிய விழுது இவை நான்கையும் சுமார் மூன்று நிமிடம் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக்கொண்ட அந்த மூன்று மூன்று என்ற மூலிகை குடிநீரில்.
சுவைக்கு ஏற்றார்போல் எலுமிச்சை சாறுகலந்து இளம் சூட்டில் சூப்பி சுவைத்து உமிழ்நீர் என்னும் உயிர் நீருடன் கலந்து பருகுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஆரோக்கியத்தின் திறவுகோலாகும்..

 

Tags :

Share via