முதலமைச்சர் பதவியை ராஜினாமா  செய்தார் எடப்பாடி கே. பழனிசாமி.

by Editor / 03-05-2021 04:24:22pm
முதலமைச்சர் பதவியை ராஜினாமா  செய்தார் எடப்பாடி கே. பழனிசாமி.



தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி கே. பழனிசாமி. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு   தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அஇஅதிமுக ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது பதவியை ராஜினாமா செய்தார்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததையொட்டி, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை  ராஜினாமா செய்துள்ளது.தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு சேலத்தில் இருந்தபடியே எடப்பாடி கே. பழனிசாமி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

 

Tags :

Share via