பனி மூட்டம் காரணமாக வயல்வெளியில் இறங்கிய ஹெலிகாப்டர்

by Editor / 08-01-2022 03:50:38pm
பனி மூட்டம் காரணமாக  வயல்வெளியில் இறங்கிய ஹெலிகாப்டர்

 கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பாரத்-ஷீலா  என்ற தம்பதியை பெங்களூரிலிருந்து ஏற்றிக்கொண்டு  எர்ணாகுளம் நோக்கிஹெலிகாப்டர் ஓன்று புறப்பட்டது,இந்த  ஹெலிகாப்டரை கேப்டன் ஜஸ்பால் இயக்கி உள்ளார், அவருடன் இன்ஜினியர் அங்கித் சிங் என்பவரும் பயணித்துள்ளார்.மொத்தம் 4 பேருடன் பெங்களுரில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் எர்ணாகுளம் நோக்கி புறப்பட்டு உள்ளது.

ஹெலிகாப்டர் புறப்பட்டு வரும்போது  ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி வழியாக வானில் வந்த போது அத்தியூர் என்ற இடத்தில் காலை 11-15 மணியளவில் தீடீரென தரை இறங்கியது.இதனையத்தொடர்ந்து
 விசாரணையில் இந்த ஹெலிகாப்டர் பெங்களூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கணவன் மனைவி வந்துவிட்டு எர்ணாகுளம் திரும்பிய போது  மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அத்தியூர் என்ற இடத்தில் தரை இறங்கியுள்ளது.பனி மூட்டம்  விலகியதை தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் சிகிச்சைக்காக வந்த கணவன் மனைவியுடன் தனியார் ஹெலிகாப்டர் எர்ணாகுளம் நோக்கி புறப்பட்டு சென்றது.

 

Tags :

Share via