தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்

by Admin / 20-01-2022 11:25:32pm
தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்

 



தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் சங்ககாலக்கொற்கைத்துறைமுகத்தினை அடையாளம் காணமுன்களப் புல ஆய்வுதொடங்க உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
       தமிழ் நிலமானது மிகத்தொன்மை வாய்ந்தது.தமிழின் தொன்மையையும்,தமிழரின் பண்பாட்டையும் அறிவியல் பூர்வமாக            நிறுவவேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும்.
        அண்மைக்காலநாக, கீழடி,அழகன்குளம்,கொற்கை,சிவகளை,ஆதிச்சநல்லூர்,கொடுமணல்,மயிலாடும்துறை, கங்கை   கொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப்  புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னோக்கி எடுத்து சென்றுள்ளதுஎன்றால் அது மிகையாகாது.
       கீழடி அகழாய்வு மற்ற அகழாய்வுகளுக்கு முன்னோடி அகழாய்வாகத்திகழ்கிறது.இதுவரை கங்கைச்சமவெளியில்
கி.மு.ஆறாம் நூற்றாண்டிலிருந்த  "நகரமயமாக்கம்" தமிழ் நாட்டில் இல்லையென்றும்,பிராமி எழுத்து மெளரியர் தோற்றுவித்தது என்றும் கருதுகோள்கள் இருந்தன.அத்தகைய கருதுகோள்களுக்கு அறிவியல் பூர்வமாக விடையளித்துள்ளது. கீழடி அகழாய்வு தமிழ் நாட்டில் கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது. என்பது மட்டுமல்லாமல்,படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலை
நிறுத்தியுள்ளது.
   சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு.ஆயிரத்து  நூற்று ஐம்பத் தைந்து எனக் கண்டறியப்பட்டுள்ளது." தண் பொருநை"என் று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை
நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்பூர்வ ஆய்வுகளின்  அடிப்படையில் உறுதி செய்ய முடிகிறது. என்பதை கடந்த 8-9-2021 அன்று சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன்.
   இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம்
முதல் வரலாற்று க்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்குத்திட்டமிடப்பட்டுள்ளது. பண்டைத்தமிழ்ச்சமூகத்தின் தொன்மை,பண்பாடு மற்றும்ழிழுமியங்களுக்குப்பெருமை சேர்க்கும் வகையில் தற்போது 2022 ஆம் ஆண்டில் கீழ்காணும் ஏழ இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படவுள்ளன.   
    1.கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள்்(கொந்தகை,அகரம், மணலூர்)சிவகங்கை மாவட்டம்-
எட்டாம்
      2.சிவகளை,தூத்துக்குடி மாவட்டம்-மூன்றாம்கட்டம்
      3.கங்கைகொண்ட சோழபுரம்-இரண்டாம்கட்டம்
       4.மயிலாடும்பாறை,கிருஷ்ணகிரி மாவட்டம்-இரண்டாம்கட்டம்
       5.வெம்பகோட்டை,விருதுநகர் மாவட்டம்-முதல்கட்டம்
       6.துலுக்கர்பட்டி,திருநெல்வேலி மாவட்டம்-முதல்கட்டம்
       7.பெரும்பாலை,தர்மபுரி மாவட்டம்-முதல்கட்டம்
      மேலும்,"திரைகடலோடியும் திரவியம்தேடல்"என்ற முதுமொழிக்கேற்ப,பண்டையத்தமிழ்ச் சமூகம் நாட்டின் பிற பகுதிகளோடும்,வெளிநாடுகளுடனும் வணிகத்தொடர்புகொண்டிருந்த சங்ககாலத்துறைமுகங்களான பூம்புகார்,கொற்கை,அழகன்குளம்,வசவசமுத்திரம் ஆகியவை முக்கிய பங்காற்றினன்றுஎன்றுகுறிப்பிட்டுள்ளார்.
.


 

 

Tags :

Share via