ஜார்க்கண்ட்டில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவத்திற்கு மாவோயிஸ்டுகளே காரணம்

by Admin / 27-01-2022 02:14:36pm
ஜார்க்கண்ட்டில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவத்திற்கு மாவோயிஸ்டுகளே காரணம்

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள சிச்சாகி மற்றும் சவுதரிபந்த் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் இன்று அதிகாலை குண்டு வெடித்தது.
 
இதனால் தண்டவாளம் கடும் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
 
இந்த குண்டு வெடிப்பு காரணமாக ஹவுரா-டெல்லி வழி தடத்தில் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.

அந்த வழிதடத்தில் செல்லும் பல ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதத்தை ஊழியர்கள் சரிசெய்த பின்னர் சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு அந்த வழி தடத்தில் ரெயில் சேவை தொடங்கியது.

இந்த நாசவேலையை மாவோயிஸ்டுகள் செய்துள்ளனர் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித் ரோணு விசாரணையை தொடங்கியுள்ளார்.

ஜார்க்கண்ட் போலீசாரால் தேடப்படும் தடை செய்யப்பட்ட அமைப்பின் மூத்த தலைவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து 24 மணி நேர பந்த்துக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில்தான் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

   
 

 

Tags :

Share via