நம்பழந்தமிழரின்காதணிகளின் #பெயர்களைஅறிந்துகொள்வோம். (பாம்படம் )

by Editor / 09-02-2022 09:26:33pm
நம்பழந்தமிழரின்காதணிகளின் #பெயர்களைஅறிந்துகொள்வோம். (பாம்படம் )

நகைகள் அணிவது, நம் பாரம்பரியத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
நகைகள் அணிவதன் மூலம், நம் உடலில் உள்ள முக்கிய வர்ம புள்ளிகளை துாண்டி, ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, தங்கம் மட்டுமே ஏற்றது.

ஆபரணங்கள் அணிவதால், நோய்கள் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. தங்கம் மட்டுமின்றி, வெள்ளி, முத்து மற்றும் பவளம் போன்ற நகைகளை அணிவதாலும், நன்மை உண்டாகிறது.
நெற்றிச் சுட்டி: தலையிலிருந்து தவழ்ந்து, நெற்றியில் அழகாக குவிந்து விழும் இந்த ஆபரணம், உடம்பில் உள்ள வெப்பத்தை கட்டுப்படுத்துகிறது. நெற்றிச்சுட்டி அணியும்போது, தலைவலி, 'சைனஸ்' பிரச்னைகளை சரி செய்கிறது.
தோடு: காதில் அணியும் ஆபரணம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அணிவதுண்டு. காது குத்தும் வழக்கம் நம் சமூகத்தில், ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரம் இட்டு, காதணி அணிவதன் முக்கிய நோக்கம், கண் பார்வையை வலுப்படுத்த தான்.
கண்களுடன் காது நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளதால், கூர்மையான கண் பார்வைக்கு தோடுகள் உதவுகின்றன; மூளையின் செயல்திறனும் அதிகரிகிறது.
மூக்குத்தி: மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும், பெருங்குடல் மற்றும் சிறு குடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்த புள்ளிகள் துாண்டப்படும்போது, அது சம்பந்தமான நோய்கள் குணமாகும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கும் உதவுகிறது.

 

Tags :

Share via