தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

by Admin / 19-02-2022 03:44:12pm
 தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

தேசிய பங்குச்சந்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் புகார் குறித்து சிபிஐ அதிகாரிகள் முன்னாள் தலைவர் ராதா கிருஷ்ணனிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

செசல்ஸ் செல்ல பெட்டி படுக்கை ரெடியாக இருக்கிறது என்று இமயமலை சாமியார் ஒருவருக்கு  ராமகிருஷ்ணன் அனுப்பிய ஈமெயிலை சிபிஐ கைப்பற்றியதை அடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க லுக் அவுட் நோட்டீசும் வெளியிடப்பட்டுள்ளது.

என்.எஸ்.இ .பங்குச்சந்தை தொடர்பான மிக இரகசியமான தகவல்களை தவறாக பயன்படுத்தியதாகவும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பரதாரர் அதிகாரிகளுடன் சதி செய்துஎன்.எஸ் .என் .சர்வர்களை தவறாக பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது

 

Tags :

Share via