ரம்ஜான் பண்டிகை : முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து
இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக மக்களுக்கே உரிய பெருமைக்குரிய பண்படான அனைத்து மத சகோதரத்துவம் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும் வகையில், இயதப் பெருநாள் அமையட்டும்.சிறுபான்மை சமுதாய மக்களுக்கும், தி.மு.க என்றும் தொப்புள் கொடி உறவு உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், நானும் என்றும் இஸ்லாமிய சமுதாய மக்களின் மேல் பேரன்பு கொண்டவர்கள்.
தி.மு.கழக அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதை
உறுதிப்படுத்த விழைகிறேன். பேறிடரிலிருந்து மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருதாள் துணையாகட்டும்!, என தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி:
இஸ்லாமிய பெருமக்களின் புனித நாளான ரமலான் நன்னாளில் ஈகை குணமும், சகோதரத்துவமும், ஒற்றுமையும் ஓங்கப்பெற்று இறைவனின் அருட்கொடையால் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.
டிடிவி தினகரன்:
புனித ரமலான் நாளில் நபி பெருமகனார் போதித்த அன்பு, ஈகை, மனிதநேயம், கோபம் தவிர்த்தல் போன்ற நற்பண்புகளின் வழியாக சிறந்த மனித சமுதாயத்தை அமைத்திட அனைவரும் உறுதியேற்போம். மேலும் கொரோனா எனும் பேரிடர்களில் இருந்து மனித குலம் முற்றிலுமாக மீண்டும் எழுச்சி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்ததற்கான நம்பிக்கையை நம்மைச் சுற்றியிருக்கிற அனைவரும் ரமலான் பெருநாள் விதைதிடுவோம்.
Tags :