பள்ளி வேனில் இருந்து இறங்கிய 4 வயது சிறுவன் வேன் சக்கரத்தில் சிக்கி  பலி.

by Editor / 17-03-2022 11:48:37pm
பள்ளி வேனில் இருந்து இறங்கிய 4 வயது சிறுவன் வேன் சக்கரத்தில் சிக்கி  பலி.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கொருக்காத்தூர் கிராமத்தில்  ஜோதி என்பவரது 4வயது மகன் சர்வேஷ் இன்று பள்ளியில் இருந்து பள்ளி வேனிலையே வீடு திரும்பிய போது வீட்டின் அருகே பள்ளி வேனில் இருந்து இறங்கிய நிலையில் அதே பள்ளி வேனின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினான்.

இறந்த சர்வேஷ் இன்று மதியம் 1.30 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாழப்பந்தல் ராகவேந்திரா தனியார் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார், பள்ளி நேரம் முடிந்து மீண்டும் சொந்த ஊரான கொருகாத்தூருக்கு பள்ளி வாகனத்தில் வந்து கீழே இறக்கி விடப்பட்டான். இந்நிலையில் சிறுவன் சர்வேஷ் பள்ளி வாகனத்தின் ஓட்டுநர் தமிழ்ச்செல்வனின் அஜாக்கிரதையால் பின்பக்க சக்கரம் குழந்தை மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே குழந்தை தலை நசுங்கி இறந்துவிட்டான்.சம்பவம் குறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி வாகனத்தில் ஓட்டுனரான தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : 4-year-old boy gets off the school van and gets stuck in the wheel of the van.

Share via