தமிழக மீனவர்களிடம் மீன் ,வலைகள்,செல்போன் ஆகியவற்றை பிடுங்கி சென்ற இலங்கை கடற்படை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தையடுத்துள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கே லெனின் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த சதிஷ், ஆறுமுகம், தமிழ்செல்வன் ஆகிய 3 பேர் பிடித்துக் கொண்டிருந்த பொது அந்த மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படையினர் மீன்கள் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள வலைகளை சேதபடுத்தி செல்போன்களை பறித்து சென்றனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உள்காயம் ஏற்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளனர்.வேதாரண்யம்கடலோர காவல் குழும போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
Tags : Sri Lankan navy snatches fish, nets, cellphones