கெயில் நிறுவன குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு:தற்கொலை செய்துகொண்ட விவசாயி சடலத்தை வைத்து போராட்டம்.

by Editor / 13-04-2022 09:12:44pm
கெயில் நிறுவன குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு:தற்கொலை செய்துகொண்ட விவசாயி சடலத்தை வைத்து  போராட்டம்.

தருமபுரி அருகே கெயில் நிறுவன குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து தருமபுரி-ஒகேனக்கல் சாலையில் சடலத்தை வைத்து  உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது வருவாய்த்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு கெயில் நிறுவன குழாய் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு நிலத்தில் பதிக்கப்படுகிறது.
இந்த கெயில் குழாய் அமைப்பதற்கு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாலக்கோடு பகுதிகள் வழியாக கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குள் கையில் நிறுவனத்தினர் குழாய் பதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக அளவிடும் பணி நடைபெற்று வந்த போது, விவசாயிகள் ஒன்றிணைந்து இந்த திட்டத்தில் விவசாய நிலங்களை தவிர்த்துசாலை மார்க்கமாக குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாலவாடி என்ற இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன் கணேசன்( 43) என்பவர்க்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலத்தின் வழியாக கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு நிலம் அளவீடு செய்யும் பணிக்காக கெயில் நிறுவனத்தினர் மற்றும் அதிகாரிகள் இன்றும் வந்திருந்தனர்.

இந்நிலையில் போராட்டம் நடந்த இடத்திலிருந்து தனது நிலத்துக்கு சென்ற விவசாயி கணேசன் தனது வீட்டிற்க்கு திரும்பி வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவலறிந்த அருகில் இருந்தவர்கள்  விவசாயி சின்னசாமியின் உடலை மீட்டு அவரது உறவினர்களும் பொதுமக்களும் அப்பகுதி விவசாயிகளும் இறந்த விவசாயி கணேசனின் உடலை  தருமபுரி-ஒகேனக்கல்  சாலையில் வைத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன், சார் ஆட்சியர் சித்ரா விஜயன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடமும் விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கெயில் நிறுவன குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு:தற்கொலை செய்துகொண்ட விவசாயி சடலத்தை வைத்து  போராட்டம்.
 

Tags :

Share via