காஷ்மீரில் இருந்து தமிழக டிஜிபிக்கு ராணுவ வீரர் வேண்டுகோள்

by Staff / 29-04-2022 03:43:44pm
காஷ்மீரில் இருந்து தமிழக டிஜிபிக்கு  ராணுவ வீரர் வேண்டுகோள்

சொந்த ஊரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை கொள்ளையடித்து சென்று விட்டதாகவும் தங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கும்படி காஷ்மீரிலிருந்து திருச்சியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தமிழக டிஜிபிக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம் இவர் கடந்த 12 வருடங்களாக காஷ்மீரில் துணை இராணுவப் படைகள் பணியாற்றி வருகின்றனர். 28 தேதி மதியம் இவரது மனைவி தனது 10 மாத பெண் குழந்தையுடன் வீட்டில் படுத்து உறங்கிய போது அவரது கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை மர்ம ஆசாமி பறித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோருக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த . தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு திருச்சியில் உள்ள ஜி ஆர் பி எஃப் வீரர்  நீல மேகத்தின் மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதுடன் நகையை பறித்துச் அண்ட் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via