சென்னையில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப நடவடிக்கை

by Staff / 18-05-2022 11:06:26am
சென்னையில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப நடவடிக்கை

சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் என்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது .முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பைத் தொடர்ந்து அங்குள்ள மக்களுக்கு அனுப்புவதற்காக அரிசி பால் பவுடர் மருந்து பொருட்கள் உள்ளிட்ட தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று சென்னை துறைமுகத்திலிருந்து நிவாரண பொருட்கள் அனைத்தும் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதன்படி 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி 15 கோடி ரூபாய் மதிப்புள்ள  500 டன் பால் பவுடர் இருபத்தி எட்டு கோடி மதிப்பிலான 137 வகையான உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் ஆகியவற்றுடன் இலங்கைக்கு இன்று கப்பல் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via