கௌதாரி பறவைகளை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய பொறியாளர்கள் இரண்டு பேர் கைது
கௌதாரி பறவைகளை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய கட்டிட பொறியாளர் இரண்டு பேரை போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அரசன் குளம் காட்டுப்பகுதியில் இருவர் பறவைகளை வேட்டையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவ்வழியாக வந்த காரை போலீசார் சோதனையிட்ட போது உள்ள இரண்டு துப்பாக்கிகளும் சுட்டுக்கொல்லப்பட்ட7 கௌதாரி பறவைகளும் இருந்துள்ளன. காரில் இருந்த கட்டிட பொறியாளர்கள் முருகன் அசோக் ஆகியோரை போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.
Tags :