அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை வருவாய்த்துறை,காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் இரவேடு இரவாக எல்லா இடங்களிலும் விநாயகர் சிலையை கொண்டு வந்து பூஜைகள் செய்து வைப்பது வழக்கம்.
ஆனால் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள கற்குடி கிராமத்தில் இரவு பக்தர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அனுமதி பெறாமல் வைக்கபபட்டதாக கூறி செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் உதவியுடன் விநாயகர் சிலையை அவமதித்து விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்த விடாமல் தடுத்து நிறுத்தி செங்கோட்டை தாசில்தார் கந்தசாமி தலமையில் கைப்பற்றி இன்று அதிகாலையில் வாகனம் மூலம் சிலையை கைப்பற்றி புளியரை தட்சிணாமூர்த்தி ஆலய வளாகத்தில் கொண்டு சென்று பாதுகாப்புடன் வைத்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :